செவ்வாய், 2 நவம்பர், 2010

உண்மையில் ஒரு பொய்....!!!



முதல் முறையாக "தாயை பிரிந்து........."
பள்ளி சென்ற போது...
இல்லாத வருத்தம்......!!!!!!!
முதல் முறையாக வீட்டை விட்டு பிரிந்து
உயர் கல்வி படிக்க வெளியூர் சென்ற போது
இல்லாத வருத்தம்.......!!!!!!
"படித்து முடித்து நண்பர்களை" பிரியும் போது
இல்லாத வருத்தம்.......!!!!!
"திருமணம் முடிந்து சகோதரி" பிரியும் போது
இல்லாத வருத்தம்........!!!!!!
என் "முதல் சம்பளத்தில்" வாங்கிய
"என் வாகனம் தொலைந்தபோது"
இல்லாத வருத்தம்......!!!!!!
வேலைக்காக வெளிநாட்டுக்கு செல்லும் போது
"அனைத்து சொந்தங்களையும்" பிரிந்த போது
இல்லாத வருத்தம்......!!!!!!
"என் உயிர் நண்பன் கருத்து வேறுபாடுகளுடன்
"என்னை விட்டு பிரிந்த போது
இல்லாத வருத்தம்........!!!!!!!


உண்மை - (பொய்)

இன்று நீ! "என்னை விட்டு பிரியும்" போதா

என்னை வருத்தப்பட வைக்கும்......!!!!!!!!!!!!

பொய் - (உண்மை)

ஏனோ, இன்று நீ! "என்னை விட்டு பிரியும்" போது


"உன் பிரிவு......." என்னை வாட்டுகிறது......!!



வியாழன், 21 அக்டோபர், 2010

அந்த ஒரு நொடி.....

எந்த
ஒரு நொடி
உன்னை என்னுள்
சேர்த்ததோ......?
காத்திருக்கின்றேன்...
அடுத்த....
ஒரு நொடிக்காக...
உன்னை.....
என்னிடமிருந்து விடுவிக்க..!!
உன்னை......
என்னுள் சேர்த்த
அந்த
ஒரு நொடி வரும்... ஆம்..!!!!
உன்னை..
என்னிடமிருந்து
"விடுவிக்க......."
"கவலை வேண்டாம்"
காத்திருக்கின்றேன்..
கலக்கமில்லாமல்...
"அந்த ஒரு நொடிக்காக....."




புதன், 20 அக்டோபர், 2010

என் சில _ _ _ _

என்
அமைதி!...
என்னை
வாழவைத்தது......
உன்
ஆர்ப்பாட்டம்!...
உன் வாழ்வை..
.......????????????

*****************************

உன்
பார்வை
என்னை
மௌனமாக்கியது....!!!!!!!
என்
மௌனமோ....?
உன்னை
????????????

*************************

உன்
அமைதி
என்னை
சிந்திக்கவைத்தது....!!!!
என்
அமைதியோ..?
உன்னை...
??????????????

***************************

உன் வரவு
என் வாழ்வில்
புயலாகும் என்றாய் ....?
ஆம்! உணர்ந்தேன்..!
உன் பிரிவில்.....
புயலுக்குப்பின்..?
அமைதியாய்......!!!!!

**********************************

வியாழன், 7 அக்டோபர், 2010

பிரிவுகள் (நன்மைக்கே)


பிரிவுகள் புதிதல்ல... ஆம்!
(எனக்கு மட்டுமல்ல...)
ஐந்து வயதில் துவங்கி....
முதல் முறையாக "தாயை பிரிந்து பள்ளி" சென்றது.
பின் எத்தனை பள்ளிகள்........
துவக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி,
உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி,
ஒவ்வோரு பள்ளியின்
பிரிவிலும் நான் கற்றேன். ஆம்!
எனது உயர் கல்வியை,
"இளநிலை பட்டம்" !
"முதுநிலைப் பட்டம்" !
எத்தனை நண்பர்கள்.......!
இன்று அனைவரும் வேவ்வேறு திசைகளில்..
அத்தனை பிரிவுகளும் என்னை
வாழ்வின் வேவ்வேறு புதிய நிலைக்கு
உயர்றியதேயன்றி அது என்றும் என்னை
"துவளவிடவில்லை" !, அத்தனை பிரிவுகளும்
"என் வளர்ச்சிக்காக"! என்று எண்ணி நான்
என்னை வளப்படுத்திக்கொண்டவன்(ள்).!
"உன்பிரிவும் உன் நலனுக்காக" என்று
எண்ணும்போது இந்தப்பிரிவும் என்னை
"பலப்படுத்துமே! அன்றி", பலவீனப் படுத்தது!...
"உன் நலன் காக்க வாவது" அது என்னை வளப்படுதும்..
"உன் சம்மதத்துடன்" , இதோ, இப்போதே!
"உன்னை விட்டு உன் நினைவுகளுடன்"....!
பிரிகின்றேன்! "கவலை வேண்டாம் கண்ணே (ணா) .........."

செவ்வாய், 5 அக்டோபர், 2010

சிந்தனை துளிகள் (எனது அல்ல)

1. பேசும்முன் கேளுங்கள், எழுதும்முன் யோசியுங்கள், செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்.

2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.

3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.

4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!

5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!

6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.

7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!

8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.

9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.

11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்.

12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்.

13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்.

14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை.

15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்.

16. யார் சொல்வது சரி என்பதல்ல , எது சரி என்பதே முக்கியம்.

17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்

18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்.

19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது
சிறப்பாகும்.

20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்.

21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்.

22. வாழ்வதும் வாழ விடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.

23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்.

24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்.

25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்.

26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்.

27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்.

28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.

29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்.

31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்.

32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்..

33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.

நன்றி
"Iniyavan Iniya"
only-for-tamil@yahoogroups.com

ஞாயிறு, 3 அக்டோபர், 2010

என் உயிருக்காக

என் உயிர்!....
எட்டு எடுத்து வைத்து இன்றுடன்
எட்டு ஆண்டுகள் முடிந்தது
"தவழும்போதே தந்தைக்கு
தன் நம்பிக்கையையும்
வேகத்தை விட விவேகமே
சிறந்தது என்றும் உணர்த்தியவள்"
அதே நம்பிக்கையுடன்
ஊலா வருகிறாள் இன்றும்...
அவள் தவறுகள் செய்யும் போது
அவள் சொல்லும் "sowhat"
எனக்கு கோபத்திற்க்கு பதில்
அவள் மீது உள்ள
நம்பிக்கையையே கூட்டுகிறது
இதே நம்பிக்கையுடன்..........
நூறண்டு காலம் வாழ்வாள்...
என்னையும் வாழ வைப்பாள்..

சனி, 2 அக்டோபர், 2010

டிஸ்கி

ரொம்ப வித்தியாசமா எழுதனுன்னு நானும் மாத்தி மாத்தி
யோசிச்சி
பார்த்தேன். "சமையலுக்கான பொருள்கள் எல்லாருக்கும்
ஒன்னுதான், ஆனா அத வச்சி நாம எவ்வளவு ருசியா
சமைக்கிறோம்" , அதுதான் இங்க முக்கியம் அப்படின்ற
முடிவுக்கு நான் வந்துட்டேன்.

அதனால நான் எழுதுரது பல பேரோட கருத்துக்களுக்கு ஒத்து போனாலும்,
அல்லது அவர்களுடைய கருத்துக்களாக இருந்தாலும் அதை எனக்கு தெரிந்த
விதத்துல நான் இங்கு சமைக்கின்றேன்.

கண்டிப்பா நீங்கள் சாப்பிட்டு துப்பினாலும் சரி, இல்ல பார்சல் எடுத்துகிட்டு
போனாலும் சரி எனக்கு சந்தோஷமே. ஆனா, சும்மா போனீங்கனா கொஞசம்
வருத்தபடுவேன். அது ரொம்ப பழகிப்போன விசயம் அப்படின்றதனால அது
என் சமையலை பாதிக்காது, முடிந்தவரை சமைச்சிக்கிட்டே இருப்பேன்.


போற்றுவோர் போற்றலும் தூற்றுவோர் தூற்றலும் போகட்டும் என்
சமையலுக்கு உப்பும் காரமுமாக.

என் கடவுள்

கடவுள் !
உனக்கு முன்னால் செல்கிறார்
உன்னை வழிநடத்த
உனக்கு பின்னால் இருக்கிறார்
உன்னை பாதுகாக்க
உனக்கு பக்கத்தில் இருக்கிறார்
உன்னை அமைதியாக்க
உனக்குள் இருக்கிறார்
உன்னை உற்சாகப்படுத்த
இவை அனைத்தையும்
கண்டேன் நான் அவரிடத்தில்
அதனால் தான் சொன்னார்களா ?
கணவனே கண் கண்ட தெய்வம் என்று.

என்றும் அன்புடன்.



வியாழன், 30 செப்டம்பர், 2010

ஒரு சின்ன வேண்டுகோள்

எழுதுரதுன்றது ரொம்ப கஷ்டம் அப்படின்றது நான் எழுத ஆரம்பிச்சப்ப
தான் தெரிஞ்ச்சி எனக்கு. உள்ள சரக்கு இருந்தத்தான் வெளியில வரும் அப்படின்றது எவ்வளவு பெரிய உண்மை, அது எனக்கு இப்ப நல்லா புரியுது. (ஐயோ! அந்த சரக்கு இல்லைங்க, ஆ ஐயோ! இந்த சரக்கும் இல்லைங்க)

ஆனா எவ்வளவு சந்தோசங்க, நான் எனக்காக எழுதும் போதும்,
என்னுடைய நினைவுகளை நானே எழுதும் போதும்.
என்னதான் நானே சமச்சி அதை நானே ருசிச்சி சாப்பிட்டாலும்,அதை
வேற யாராச்சும் சாப்பிட்டு நல்லா இருக்குன்னு சொன்னா எவ்வளவு சந்தோஷமா இருக்கும், அதுமாதிரி நீங்கள் எதாச்சும் சொன்னீங்கன்னா நானும் ரொம்ப சந்தோஷப் படுவேனுங்கோ.

டிஸ்கி : கமண்ட்டு போடுஙக அப்படின்றத இதைவிட டீசன்டா என்னால கேக்க முடியாதுங்கோ.

புதன், 29 செப்டம்பர், 2010

கிருக்கள்களின் ஆரம்பம்

ஆரம்பம்! ஆம்!
எனது பயணத்தின் ஆரம்பம்
எங்கிருந்து துவங்கி
எங்கு பயணிப்பது?
என்று என்னை நானே கேட்டு
எத்தனை நாள் காத்திருப்பது
எனக்கான பயணத்தினை, ஆம்!
என் வாழ்க்கை பயணத்தை துவக்குகிறேன்
என் பயணத்தினை யாருடன் துவக்குவது?
எனக்கு உயிர் கொடுத்தவளுடனா?
என் உயிருக்கு இணையானவளுடனா?
(என் உயிர் என்று நினைப்பவளுடனா?)
என் உயிர் வழிவந்த
என் உயிரானவளுடனா?
என்னை நானாக வாழவைத்த
என் உடன் பிறப்புக்களுடனா?
எத்தனை கேள்விகள்
என்னுள் தோன்றி
என்னை ஆண்டு கொண்டிருக்க
என்னை அறியாமல், நான்
என் பயணத்தினை துவக்கிவிட்டேன்
என்னுடன் இவர்கள் யாரும் இல்லாமல்
என் உயிரினும் மேலான
என் அன்பு நண்பர்களுடன்

என்றும் அன்புடன்

செவ்வாய், 28 செப்டம்பர், 2010

பதிவுலகத்தில் எனது முதல் படி

கடந்த ஓராண்டு காலமக நான் வலைபதிவுகளை படித்து
வருகின்றேன். அதன்மேல் எனக்கு இருந்த ஆர்வத்தினால்
எனக்கும் எழுத வேண்டும் என்ற ஆர்வம் பிறந்தது.
(பதினைந்து ஆண்டுகளுக்கு பிறகு) இன்று அதற்கான
முதல் படியை நீண்டதொரு விவாதத்திற்க்கு பிறகு
துவக்கிவிட்டேன். என்ன எழுதுவது என்று முடிவு
செய்யாவிட்டாலும் துவக்கப்பட்டுவிட்டது எனது
வலை உலக பயணம் எழுத்து என்ற வாகனத்தில்.

பதினைந்து ஆண்டுகளுக்கு பிறகு நான் எழுதுவதால்
(அதுக்கு முன்னாடி நான் ரொம்ப சின்னபையங்க)
எனது சிந்தனை மற்றும் நினைவுகள் சற்று மழுங்கி
இருப்பதால் எனது எழுத்து மற்றும் மொழி
நடைகளில் சில அல்லது பல பிழைகள் இருக்கலாம்
தயவு செய்து எனது பதிவுகளை படிப்பவர்கள் அதில்
இருக்கும் தவறுகளை சுட்டிகாட்டி (பின்னூட்டமிட்டு)
என்னை வழிநடத்தி என்னுடைய இந்த பயணம் இனிதே
அமைய வாழ்த்துமாறு உங்களை அன்புடன்
கேட்டுக்கொள்கின்றேன்.

என்றும் அன்புடன்.

ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

பயணங்கள் தொடரும்.,,,,

காலம் என்னை மிக விரைவில் உங்களுடன் கலக்கும் என்னும் நம்பிகையில் நான் என் எழுத்துப் பயணத்தினை தொடர்கின்றேன்........