சனி, 2 பிப்ரவரி, 2013

உயிரற்ற மனது


"மன்னித்து விடச் சொன்னாய்"
அத்தனை முறையும் "மன்னித்தேன்"
இந்த ஒரு முறையும்....
"மன்னிக்கச் சொல்கிறாய்".!!!!!
என்னால் "முடியவில்லை" என்றேன்?....
ஏன் என்றாய்?..........
இத்தனை முறை "மன்னித்த உன்னால்"...
இன்று ஏன்?......
முடியாது என்கிறாய் ...! !!!!
இதுவரை "என்மனது".... என்னிடம்
""உயிருடன் இருந்தது""......!!!!!!
இன்று "அதை கொன்றுவிட்டு".......
என்னை மன்னித்து விடு என்றால்?....
"என்ன செய்வது நான்"?
எப்படி "மன்னிக்கும்" ?.. உன்னை
"" உயிரற்ற என் மனது""".