வெள்ளி, 23 மே, 2014

வலியும் ஒருவித சுகமே.....


மீண்டும் அதே வலி...
எழுந்து கொண்டிருக்கின்றேன்.
விழுந்த இடம் தான் தெரியவில்லை...
ஆனால் இம்முறை அடி சற்று அதிகமே...
மனதில் ஒரு தெளிவில்லாத சிந்தனை !!
உறவின் நெருக்கத்திற்கு ஏற்ப
வலியின் வீரியம் அதிகமே.
ஏனோ மனம் மீண்டும் மீண்டும்,
ஏற்க மறுக்கிறது வலியின் நிவாரணத்தை.
போதை ஏற்றி வலியை மறப்பதை விட...
அவ்வலியில் உள்ள சுகத்தை முழுவதும்
ஏற்கவே மனம் விரும்புகிறது.
சுகமான சுமைகளை தாண்டி
சில சுகமான வலிகளை  மனம் விரும்பியே ஏற்கிறது.
சுமைகள் அடுத்தவர்களுக்காக சுமப்பது..
ஆனால் வலிகள் நமக்காக ... என்பதாலோ......!!!!!