புதன், 9 ஜூலை, 2014

என்னவென்று சொல்வது..!!!


உறங்கும் வேளையில்
விழித்துக் கொண்டிருக்கின்றேன்..!!!

இரவு உறக்கத்தின் இடையிடையே ......
எத்தனை முறை விழிப்பது..??

உறங்க வேண்டிய இரவு நேரத்தில்
உறக்கம் களைந்து விழிப்பதும்..

விழித்திருக்க வேண்டிய
பகல் நேரத்தின் இடையிடையே ..
உறக்கம் வந்து வந்து செல்வதும்..

வாழ்கை பயணமானது
சொர்கத்தின் இடையில் நரகத்தையும்
நரகத்தின் இடையில் சொர்கத்தையும்
மாறி மாறி உணர்த்திக் கொண்டேயிருக்கிறது
எதனையும் முழுமை அடையவிடாமல்.

இன்னும் எத்தனை காலம் இந்த
சொர்கநரகமும், நரகசொர்கமும்.
விடைதெரியாமல்..
விழித்திருந்த இரவுகளே அதிகம்.......


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக