கடந்த ஓராண்டு காலமக நான் வலைபதிவுகளை படித்து
வருகின்றேன். அதன்மேல் எனக்கு இருந்த ஆர்வத்தினால்
எனக்கும் எழுத வேண்டும் என்ற ஆர்வம் பிறந்தது.
(பதினைந்து ஆண்டுகளுக்கு பிறகு) இன்று அதற்கான
முதல் படியை நீண்டதொரு விவாதத்திற்க்கு பிறகு
துவக்கிவிட்டேன். என்ன எழுதுவது என்று முடிவு
செய்யாவிட்டாலும் துவக்கப்பட்டுவிட்டது எனது
வலை உலக பயணம் எழுத்து என்ற வாகனத்தில்.
பதினைந்து ஆண்டுகளுக்கு பிறகு நான் எழுதுவதால்
(அதுக்கு முன்னாடி நான் ரொம்ப சின்னபையங்க)
எனது சிந்தனை மற்றும் நினைவுகள் சற்று மழுங்கி
இருப்பதால் எனது எழுத்து மற்றும் மொழி
நடைகளில் சில அல்லது பல பிழைகள் இருக்கலாம்
தயவு செய்து எனது பதிவுகளை படிப்பவர்கள் அதில்
இருக்கும் தவறுகளை சுட்டிகாட்டி (பின்னூட்டமிட்டு)
என்னை வழிநடத்தி என்னுடைய இந்த பயணம் இனிதே
அமைய வாழ்த்துமாறு உங்களை அன்புடன்
கேட்டுக்கொள்கின்றேன்.
என்றும் அன்புடன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக